அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்




கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர் மற்றும் செவிலியர்களை நியமிக்க கோரியும், கூடுதல் மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்த வலியுறுத்தியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமதுஜான் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் செல்லசாமி, மாநில துணை செயலாளர் துரைமுகம்மது ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தோழமை கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments