இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பு; கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் மீது வழக்கு




இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பு; விசைப்படகுகள் மீது வழக்கு


கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீன்வளத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் ரோந்து படகு மூலம் இப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 விசைப்படகுகள் இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தது தெரிய வந்தது. உடனே இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க உதவும் இரும்பு ராடினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 4 விசைப்படகு மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments