திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது டீசல் லோகோ என்ஜின் மற்றும் ரெயில் வேகனை போக்குவரத்து சேவைக்காகவும், சிறப்பு வாய்ந்த ஊட்டி மலை ரெயில் நீராவி என்ஜினையும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பொன்மலை பணிமனையில் உள்ள டீசல் இன்ஜின் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களை பாராட்டி கவுரவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;-
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றது. இந்த பணிமனையில் உருவாக்கப்பட்ட முதல் அதிவேக டீசல் என்ஜின் நீலகிரி மலைப்பாதைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சி. இதை உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடுதல் ரெயில்கள்
வந்தே பாரத் திட்டம் தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். நடப்பு நிதியாண்டில் சில ரேக்ஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாரத் கவுரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ரெயில்கள் இயங்குகின்றன. மேலும் கூடுதலாக ஒரு ரெயில் இந்த மாதம் மற்றும் நவம்பர் மாதத்திலும், 3 ரெயில்கள் அக்டோபர் மாதத்திலும் இயக்கப்படும். பாரத் கவுரவ் திட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயில் பாரத் கவுரவ் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் ஷ்யாம்தர் ராம், முதன்மை தலைமை எந்திர பொறியாளர் கவுதம் துத்தா மற்றும் பணிமனை அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.