கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளில் கடந்த 2 வருடங்களில் 11 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அதேபோல இந்த வருடமும் ஏராளமான மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது பள்ளியில் படிக்கும் போதே மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு தயாராகும் விதமாக திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவபாலன் தேவையான புத்தகங்களை வழங்கியுள்ளார். நேற்று பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் சமூக ஆர்வலர் சிகாலெனின் பள்ளிகளில் உள்ள நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்த புத்தங்களை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஓய்வு நேரங்களில் படிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.