கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் மூன்று புதிய படிப்புகளுக்கான சேர்க்கை தொடக்கம்..!



உடனடி வேலைவாய்ப்பு பெற கூடிய வகையில் Physiotherapy Technician, Smart Phone Technician cum App Tester, Digital Photographer ஆகிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சென்னை கிண்டியுள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி வேலைவாய்ப்பு பெற கூடிய வகையில் Physiotherapy Technician, Smart Phone Technician cum App Tester, Digital Photographer ஆகிய புதிய தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை 30.09.2022 வரை நடைபெறும்.

குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்தவுடன் மத்திய அரசால் வழங்கப்படும் NTC சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முன்னணி நிறுவனங்கள் மூலம் வளாக நேர்காணல் நடத்தப்பட்டு (Campus Interview) வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

மேலும், தெளிவுரை வேண்டுவோர் 9841504671, 9962621331 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments