என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பதற்கான பதிலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
என்ஜினீயரிங் கலந்தாய்வு
சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று பார்வையிட்டார். அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-என்ஜினீயரிங் கலந்தாய்வு 2-வது சுற்றில், 31 ஆயிரத்து 94 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 23 ஆயிரத்து 458 பேர் விருப்ப இடங்களை தேர்வு செய்ததில், 14 ஆயிரத்து 153 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5 ஆயிரத்து 16 பேர் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். 4 ஆயிரத்து 16 பேர் முதன்மை விருப்ப இடங்களுக்காக காத்திருக்கின்றனர். முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், 10 ஆயிரத்து 351 இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வருகிற 5-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வருகிற 8-ந்தேதி முதல் அவர்களுக்கான கலந்தாய்வும் தொடங்க உள்ளது. குறைவான மாணவ-மாணவிகளே விண்ணப்பித்திருப்பதால், ஒரே சுற்று கலந்தாய்விலேயே இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலி இடங்கள் இருக்காது
நீட் தேர்வின் விளைவினால்தான், கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஆகிறது. நீட் தேர்வு முடிவு தாமதமாக வந்ததுதான், இதற்கு முக்கிய காரணம். கடந்த முறை நீட் தேர்வு முடிவுக்கு முன்னதாக என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்தியதால், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் இடங்கள் அதிகம் காலியாகி இருந்தன. இந்த ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கையால் அதுபோன்ற காலி இடங்கள் இருக்காது.இதை தவிர்க்க மத்திய அரசிடம் முன்கூட்டியே நீட் தேர்வு முடிவை வெளியிட கேட்டோம். அதிலும் குறிப்பாக நாம் நீட் தேர்வே வேண்டாம் என்று சொல்லி வருகிறோம். அதனால் நீட் தேர்வை எடுத்துவிட்டாலோ, தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்டுவிட்டாலோ, கல்வியாண்டு தாமதமாவது தவிர்க்கப்படும்.
முதலாம் ஆண்டு வகுப்புகள்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை நன்றாகவே நடந்து வருகிறது. என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகளை பொறுத்தவரையில், 4 சுற்று கலந்தாய்வு முடிந்ததும், அக்டோபர் (இம்மாதம்) இறுதியில் தொடங்கும். முதலாம் ஆண்டில் சேரும் என்ஜினீயரிங் மாணவிகளில் அரசு பள்ளிகளில் படித்து சேர்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வராண்டா அட்மிஷன் மூலம் சேர்ந்து கொள்ளலாம். கல்லூரிகளில் காலியிடங்கள் இருக்கும்பட்சத்தில் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்துக்கொள்ள முடியும். இதில் மாற்று கருத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.