பதவியை தவறாக பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்ததாக புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டையில் பத்திரப்பதிவு துறையில் மாவட்ட பதிவாளராக (தணிக்கை பிரிவு) பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார். இவரது வீடு புதுக்கோட்டையில் கே.எல்.கே.எஸ். நகரில் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை அஞ்சனகுமாரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அஞ்சனகுமார் வீட்டில் இருந்தார். வீட்டில் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர்.
இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘‘அஞ்சனகுமார் மதுரையில் பணியாற்றிய காலத்தில் தனது பதவியை பயன்படுத்தி முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. அஞ்சனகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாறுதலில் புதுக்கோட்டை வந்தார். அதனால் இங்குள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது ’’ என்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு?
முன்னதாக சோதனையின் போது வீட்டிற்குள் யாரும் செல்லாதபடி நுழைவு வாயில் கதவை போலீசார் மூடினர். வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டிற்குள் கதவினையும் போலீசார் உள்பக்கமாக பூட்டி சோதனை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதோடு, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையானது நேற்று மாலை வரை நீடித்தது. அஞ்சனகுமார் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததின் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், அவர் பணியாற்றிய இடங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.