ஜல் ஜீவன் திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டுகோள்




ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் பாதுகாப்பான தூய குடிநீர் வழங்கி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை 2024-ம் ஆண்டிற்குள் நிறைவு செய்து தன்னிறைவு பெற்ற மாவட்டமாக அறிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஜல் ஜீவன் மிஷன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மத்திய அரசின் 45 சதவீத பங்குத்தொகையும், மாநில அரசின் 45 சதவீத பங்குத்தொகையும் மற்றும் பொதுமக்களின் 10 சதவீத பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்படும் குக்கிராமங்களில் சமூக பங்களிப்பானது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் குக்கிராமங்களில் 5 சதவீதமும், பொது குக்கிராமங்களில் 10 சதவீதமும் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட வேண்டும்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டிற்கு 146 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 579 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கென சமூக பங்களிப்பாக ரூ.5.006 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் 2022- 23-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்குட்பட்ட 81 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென மொத்த மதிப்பீட்டில் சமூக பங்களிப்பாக ரூ.1.09 கோடி பெற வேண்டியுள்ளது. 

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்களிப்பினை அந்தந்த கிராம ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்திடுமாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments