இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப்பணிகள் 81% நிறைவுபெற்றதாக
நூறாண்டு பழமையான பாம் பன் ரயில் பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுந்ததால் பாம்பன் கடலில் புதிய பாலம் கட்டும் முடிவை மேற்கொண்டு 2018-ம் ஆண்டு டிசம்பரில் மத்திய ரயில்வே அமைச்சகம் அதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, ரயில்வே சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 2019 மார்ச்சில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 11.8.2019 அன்று பூமி பூஜையுடன் கட்டுமானப்பணிகள் தொடங்கின. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை இயந்திரங்கள், பாறை துளைப்பான் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.279.9 கோடி. பாலத்தின் நீளம் 2,078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது
கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதிய பாலம் எழுப்பப்பட உள்ளது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைய உள்ளது.
ரயில்வே நிர்வாகம் 31.09.21-க்குள் பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால் பருவமழை, இயற்கை சீற்றத்தால் பாலப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மிதவைகள், கிரேன்கள் அடிக்கடி கட்டுப்பாட்டை இழந்து தற்போ தைய ரயில் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அவ்வப்போது பணிகள் நிறுத் தப்பட்டன. இதனால் குறித்த இலக் குக்குள் பணிகள் முடியவில்லை
இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில், பாம்பன் கடலில் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில்வே புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானப்பணிகள் 81% நிறைவுபெற்றதாக
மத்திய ரயில்வே வருவதாகத் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.