கம்பன் எக்ஸ்பிரஸ்; சு. வெங்கடேசன் எம்.பி கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை. தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு
இதுகுறுத்து சு.வெங்கடேசன் MP வெளியிட்ட பதிவில், "
தாம்பரம்- செங்கோட்டை இடையே திருவாரூர் காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை விரைவு ரயில் விட பொது மேலாளர் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை! கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் திருவாரூர் காரைக்குடி பிரிவில் விரிவுபடுத்த என் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் செய்துள்ள இந்த பரிந்துரையை வரவேற்கிறேன்! அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!
கம்பன் விரைவு ரயில் திருவாரூருக்கும் காரைக்குடிக்கும் இடையே மீண்டும் இயக்க நான் ஆகஸ்ட் 31ஆம் தேதி தெற்கு ரயில்வேபொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன். மக்கள் கோரிக்கையை நான் அவருக்கு தெரிவித்தேன். பொது மேலாளர் செப்டம்பர் 26 தேதியிட்ட பதில் கடிதத்தை எனக்கு அனுப்பியுள்ளார்.
அதில் தாம்பரத்துக்கும் செங்கோட்டைக்கு இடையே திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை காரைக்குடி வழியாக வாரம் மூன்று முறை ஒரு புதிய ரயிலை இயக்க கால அட்டவணை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரயில்வே கால அட்டவணை குழு இதனை கால அட்டவணையில் சேர்க்க ஏற்பாடு செய்யும் என்று பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே தீபாவளிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து இதே வழியாக ஒரு சிறப்பு ரயிலை இயக்க பொது மேலாளர் அனுமதி அளித்துள்ளார். என் கோரிக்கையை ஏற்று இந்த புதிய ரயிலை இயக்க ஏற்பாடு செய்த பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த கோரிக்கையை என்னிடம் கொண்டு வந்த பொது மக்களுக்கும் இயக்கங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.