ஜெகதாப்பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முத்தனேந்தல் அருகே இன்று 4.10.2022 இரவு 9.15 மணியளவில் சென்று கொண்டிருந்த நிலையில் திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிழந்த பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை பொதுமக்கள் உதவியுடன் மீட்கபட்டனர்.மேலும் ஓட்டுனரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பேருந்தில் தொண்டியை சேர்ந்த நான்கு பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்தை மீட்கும் பணியில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்கள் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.