திருச்சி ரயில்வே மண்டலத்தில் 5 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் இன்று (அக்டோபர் 04) முதல் உயர்த்தப்பட்டுள்ளது
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரயில் நிலையங்களுக்கு சொந்த ஊருக்கு செல்ல அதிக அளவிலான மக்கள் கூடுவார்கள்.ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் ஒரு புறம் இருக்க உறவினர்களையும், நண்பர்களையும் வழியனுப்ப வந்தவர்கள் மற்றும் அவர்களை வரவேற்க வந்தவர்கள் என பயணிகள் அல்லாதோரின் கூட்டமும் அதிகமாக இருக்கும். எனவே பயணிகள் அல்லாதோரின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் உயர்த்தி உள்ளது.
திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. முன்னதாக ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்ட நடைமேடை கட்டணம் ரூ. 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டண உயர்வு அடுத்தாண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடைமேடை கட்டணம் உயர்வு என்பது திருச்சி ரயில்வே கோட்டதிற்கு உட்பட்ட தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.