ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை



வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கடந்த 19-ந்தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் 3-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments