திருட்டு
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிங்கமுத்து (வயது 52). இவர் பிருந்தாவனம் பகுதியில் மியூசிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் அன்றைய தினம் இரவு இவரது கடையில் பூட்டியிருந்த கதவினை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
மேலும் கடையில் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பென்டிரைவ்கள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கடையை திறக்க வந்த சிங்கமுத்து அதிர்ச்சியடைந்தார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் சிங்கமுத்து புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்காணிப்பு கேமரா
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிங்கமுத்து கடையின் அருகே உள்ள பிரியாணி கடையிலும் திருட்டு நடந்துள்ளது. இதில் ரூ.10 ஆயிரம் திருட்டுபோகி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.