ஆவுடையார்கோவில் போலீஸ் சரகம் துரையரசபுரத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை முன் ஆவுடையார்கோவில்-அறந்தாங்கி சாலையில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் கருணா தலைமையில், அண்ணா தொழிற்சங்க தலைவர் மாதவன், தொ.மு.ச., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 8 மணி நேர பணியில் தற்போது 80 கிலோ நூல் எடுப்பதை 110 கிலோ எடுக்க சொல்வதாக கூறியும், ஒப்பந்த பணிகளை தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்ததை கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நூற்பாலை மேலாளர் வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மில் நிர்வாகத்தினர் 30-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால், அதுவரை 80 கிலோ நூல் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.