ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சலோமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி பண்டிகைையயொட்டி குலதெய்வத்தை கும்பிடுவதற்காக நன்கொடை வசூல் செய்ய சென்ற நரிக்குறவர்கள் அப்பாதுரை, ரஞ்சித், பாண்டி ஆகியோரை இழிவுப்படுத்தி 3 நாட்கள் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தி போலீஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வைத்ததை கண்டித்தும், மேற்கண்ட செயல் நடக்க வாய்மொழி உத்தரவு பிறப்பித்த அதிகார மையத்தின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பாரம்பரியமாக வழிபட்டு வரும் நரிக்குறவர்களின் வழிபாட்டு தலத்திற்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். நரிக்குறவர் காலனிக்கு கழிவறைகள் அமைத்து தர வேண்டும். கடந்த 1977- ம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த காலனி வீடுகளை புதிதாக கட்டித்தர வேண்டும். நரிக்குறவர் காலனிக்கு குடிநீர் உள்ளிட்ட குறைபாடுகளை நரிக்குறவர்களுக்கு புறக்கணிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதில் மாநில தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் சாமுவேல்ராஜ், சின்னதுரை எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.