புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மாடு ஒன்று இறந்தது.
கிழக்கு கடற்கரை சாலையில் பகல் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் அதி வேகமாக செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று டிசம்பர் 04 மாலை கோட்டைப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகாமையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது.
அப்பகுதி மக்கள் மாட்டின் உரிமையாளர் யாரும் தேடி வருகிறார்களா என்று சிலமணி நேரம் காத்திருந்தனர். ஆனால் யாரும் வராத காரணத்தினால் சமூக ஆர்வலர்கள் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி அடக்கம் செய்தனர்.
மற்றோரு விபத்து
மாட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் அடக்கம் செய்யும் போது கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் லாபிர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து இருக்கும் போது. கட்டுப்பாட்டை இழந்து வேறு ஒரு இரு சக்கர வாகனம் மோதியதில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டது..
ஏற்கெனவே பலமுறை ஊராட்சி நிர்வாகம் எச்சரித்து சாலையில் கால்நடைகளை சுற்றித்திரிகிறுது எனவே தயவு செய்து கால்நடைகள் வளர்ப்பவர்கள் ஊராட்சி நிர்வாகிகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.