யாழ்ப்பாணம்-சென்னை இடையே அடுத்த வாரம் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று இலங்கை மந்திரி தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் பலாலியில் விமான நிலையம் இயங்கி வருகிறது. சீர்குலைந்த நிலையில் காணப்பட்ட அந்த விமான நிலையம், கடந்த 2019-ம் ஆண்டு இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு நிதியுதவியுடன் மறுசீரமைக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கு தரையிறங்கிய முதலாவது சர்வதேச விமானம், சென்னையில் இருந்து சென்ற விமானம் ஆகும். ஏர் இந்தியாவின் துணை நிறுவனம், சென்னை-யாழ்ப்பாணம் இடையே 3 வாராந்திர விமானங்களை இயக்கி வந்தது.
இருப்பினும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு கொரோனா பரவலால் விமான போக்குவரத்து மேலும் சீர்குலைந்தது.
இந்தநிலையில், 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குகிறது.
இதுகுறித்து இலங்கை விமான போக்குவரத்து மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா நாடாளுமன்றத்தில் கூறியதாவது:-
யாழ்ப்பாணம்-சென்னை இடையே அடுத்த வாரம் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குகிறது. அநேகமாக, 12-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்கப்படலாம்.
தற்போது, ஓடுபாதையில் சில பணிகளை முடிக்க வேண்டி உள்ளது. தற்போதைய நிலையில், அந்த ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்களை மட்டுமே இயக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விமான போக்குவரத்து, இலங்கை சுற்றுலா துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டுவர பயன்படும் என்றும் கருதப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.