முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை எழும்பூரில் இருந்து பொதிகை SF எக்ஸ்பிரஸில் தென்காசி பயணம்



தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ரயில் பயணம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சராக பதவியேற்றபிறகு, முதல்முறையாக தென்காசி மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளார். பல்வேறு மாவட்டங்களுக்கும் விமானம் மூலம் சென்ற மு.க.ஸ்டாலின், முதல்முறையாக ரயில் மூலம் பயணிக்கிறார். இதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து இன்று இரவு 8.40 மணிக்கு புறப்படும் பொதிகை விரைவு ரயிலில் செல்கிறார்.

குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நாளை காலை சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மதுரை சென்று இரவு தங்குகிறார்.!

நாளை மறுதினம் காலையில் அங்கு மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்துவைக்கிறார். பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இந்நிலையில் முதல்வர் பயணிக்கக்கூடிய சாலைகள், கணக்குபிள்ளை வலசை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மேடை, பந்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முதலமைச்சரின் பயணத்திற்காக ரெயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது.




முதலமைச்சரின் பயணத்திற்காக பொதிகை ரெயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உண்டு.

இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக 'சலூன்' என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது.

இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் வசதியுடன் கூடிய 2 பெட்ரூம், பெரியஹால், டைனிங் டேபிள், உட்கார சோபா, நாற்காலி, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உண்டு.

சமையலறையில் தேவையான பாத்திரங்கள், சுடுநீர், குளிர்சாதன பெட்டி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர், போன்றவை பொருத்தப்பட்டிருக்கும்.

இது ரெயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படுவதால் பின்புறம் இருக்கும் ஜன்னல் மூலமும் இயற்கை அழகை ரசிக்க முடியும்.

பெரிய நட்சத்திர விடுதியில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த ரெயில் பெட்டியில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் வழங்குகிறது. பயணிகள் தொந்தரவு இல்லாத பயணத்தை இதில் மேற்கொள்ள முடியும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சொகுசு சலூன் பெட்டியில் பயணம் செய்ய இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

பொதுமக்களும் இதுபோல் பயணம் செய்ய விரும்பினால் ரூ.2 லட்சம் கட்டினால் சலூன் பெட்டி இணைக்கப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments