கோட்டைப்பட்டிணம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி துணைமின் நிலையங்களில் 04.02.2023 (நாளை) சனிக்கிழமை மின்தடை அறிவிப்பு!



மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 04.02.2023 சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதையொட்டி கொடிக்குளம், அமரடக்கி, ஆவுடையார்கோவில் ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை 04.02.2023 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

கொடிக்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், கோபாலப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், மணமேல்குடி, அமரடக்கி, கரூர், திருப்புனவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 04.02.2023 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: மேற்கண்ட அறிவிப்பு, தவிர்க்க முடியாத பட்சத்தில் , கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்பட வேண்டிய தொலைபேசி எண்கள்.

ஆவுடையார்கோவில் 9445854241
கரூர் 9445854242
நாகுடி 9445854237
மணமேல்குடி 9445854240
சுப்பிரமணியபுரம் 9445854238
கோட்டைப்பட்டினம் 9445854239


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments