அன்னவாசல் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை மோசடி செய்ததாக, ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குவைத்திற்கு அனுப்புவதாக...
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மரிங்கிப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் விசு (வயது 32). இவரும், சென்னை அடையார் பகுதியை சேர்ந்த சாகுல்அமீது என்பவரும் சென்னையில் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
அப்போது இருவரும் நண்பராக பழகி வந்தனர். இந்தநிலையில் விசுவை குவைத் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறிய சாகுல் அமீது கடந்த 2020-ம் ஆண்டு பல தவணையாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை விசுவிடம் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. விசு, பலமுறை சாகுல் அமீதுவிடம் வெளிநாடு அனுப்ப கோரியும் அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
பின்னர் வெளி நாட்டுக்கு அனுப்பாததால், தனது பணத்தை திருப்பித் தருமாறு சாகுல் அமீதுவிடம் பலமுறை விசு கேட்டுள்ளார். ஆனால் சாகுல் அமீது பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக கூறியவர் இதுநாள் வரைக்கும் திருப்பி கொடுக்க வில்லை எனக்கூறப்படுகிறது.
இதையடுத்து, தன்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய சென்னை அடையார் பகுதியை சேர்ந்த சாகுல்அமீது மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவரிடமிருந்து தனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என விசு அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.