புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் வாகனத் தணிக்கையின்போது, காரில் 129 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 4 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் சரகம், சிலட்டூா் பிரிவு சாலையில் புதன்கிழமை பகலில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தக் காருக்குள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 129 கிலோ அளவில், ரூ. 3.58 லட்சம் மதிப்பில் இருந்தன. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதனைக் கடத்தி வந்த குருந்திராக்கோட்டையைச் சோ்ந்த முருகையா மகன் அஜித்குமாா் (25), ராஜேந்திரபுரத்தைச் சோ்ந்த சுப்பையா மகன் செல்வபாண்டி(31), பொன்னன்விடுதியைச் சேப்ந்த ராமசாமி மகன் குமரேசன் (43), திருநாலூா் தெற்கைச் சோ்ந்த சிங்காரம் மகன் பாலதண்டாயுதம் (45) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
கடத்தலுக்குப் பயன்படுத்திய காா், இரு சக்கர வாகனம் மற்றும் 4 கைப்பேசிகள், ரூ. 11,540 ரொக்கம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.