ஆவுடையார்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், துணை தாசில்தார்கள், கிராம உதவியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்ற பதாகைகளை கையில் பிடித்தவாறு ஆவுடையார்கோவில், அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
பொன்னமராவதி காந்தி சிலை முன்பு வருவாய்த்துறை சார்பில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பிரசாரம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் பொன்னமராவதி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து, துணை தாசில்தார் சேகர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பஸ் நிறுத்தம், காமராஜர் சிலை பஸ் நிறுத்தம், வடகாடு முக்கம், சந்தைப்பேட்டை வழியாக வந்து மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.