மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 28-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
ஆதார் எண் இணைப்பு
ஈரோட்டில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்களின் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 15.11.2022 முதல் ஆன்லைன் மூலமாகவும், 28.11.2022 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்ட்டர்கள் மூலமாகவும் தொடங்கி வைக்கப்பட்டன.
பணிகளை முடிப்பதற்கு முதற்கட்டமாக 31.12.2022 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலக்கெடுவானது 31.1.2023 வரை நீட்டிக்கப்பட்டது.
7.21 லட்சம் பேர் இணைக்கவில்லை
ஜனவரி மாதத்தில் தைப்பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் அதிகம் இருந்ததால், 15.2.2023 வரை மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு இறுதியாக கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
தொடங்கிய நாள் முதல் 15-ந்தேதி (நேற்று) மதியம் 1 மணி வரை 2 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கிறார்கள். இது மொத்தமுள்ள 2 கோடியே 67 லட்சத்து 79 ஆயிரம் மின் நுகர்வோர்களில் 97.31 சதவீதம் ஆகும். மீதம் உள்ள 7.21 லட்சம் (2.69 சதவீதம்) மின் நுகர்வோர்கள் அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை.
28-ந்தேதி கடைசி நாள்
மீதமுள்ள பொதுமக்களும் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்காக வருகின்ற 28-ந்தேதி வரை காலக்கெடு இறுதியாக நீட்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.