கடந்த பதினைந்து நாட்களாக கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு அரசு மேல்நிலை பள்ளி அருகில் உள்ள ஆழ்துளாய் கிணற்றில் இருந்து குழாய் வழியாக குடிநீர் செல்கிறது. இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த பதினைந்து நாட்களாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வீணவது மட்டுமல்லாமல் வெளியேறி தேங்கி நிற்கும் நீரால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் கோபாலப்பட்டிணம் OHT ஆபரேட்டரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை.
எனவே ஊராட்சி நிர்வாகம் உடைப்பு ஏற்பட்டிருக்கும் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் உடைப்பு ஏற்பட்டிருந்த இந்த குழாய் சரி செய்யப்பட்ட நிலையில் திரும்பவும் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.