புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை.. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்






ஏப்ரல் 10ம் தேதி நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு ஏப்ரல் 29-ஆம் தேதி பணி நாள் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments