அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அறந்தாங்கியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு
தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஏழைகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டு பொதுமக்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் பெற்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயலில் 120 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் 3 பிளாக்குகள் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. கட்டிட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.
பயனாளிகள் தேர்வு
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் பலருக்கு வீடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் கிடைத்த நிலையில் கூத்தாடிவயலில் கட்டப்படும் குடியிருப்புகள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படுகிறது. ஏழைகள் மற்றும் வீடற்றவர்கள் வீடு வசதி கோரி கலெக்டர் அலுவலகம் மற்றும் முகாம்களில் மனுக்கள் அளித்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்பு ஒதுக்கப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்து விட்டன. கட்டிடத்தில் சில இறுதிக்கட்ட பணிகளும், சாலை வசதியும் அமைக்க வேண்டி உள்ளது. அதன்பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பயன்பாட்டிற்கு வரும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.