தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு கட்டணம் உயர்வு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பிற கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அதன்படி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.
வகுப்புகளை புறக்கணித்து...
கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று 1 மணிநேரம் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்பாக பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை உறுதி செய்ய கோரியும், மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்க வேண்டியும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி வகுப்புக்கு சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.