மீமிசல் சத்திரப்பட்டினம் கிராம மக்களும், ஏம்பக்கோட்டை ஜமாத்தார்களும் இணைந்து நடத்திய மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்



புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் சத்திரப்பட்டினம் கிராம மக்களும், ஏம்பக்கோட்டை ஜமாத்தார்களும் இணைந்து மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை நடத்தினர். இதில் பூஞ்சிட்டு மாடு, நடுமாடு ஆகிய பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments