கோபாலப்பட்டிணத்தில் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவர்-மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி!



கோபாலப்பட்டிணத்தில் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவர்-மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக 19/03/2023 அன்று அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ, மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் குலாம் பாட்ஷா தலைமை தாங்கினார். கிளை தலைவர் செய்யது இபுராஹிம் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் மஹாதீர் முகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். TNTJ பேச்சாளர் அப்துல் ரசாக் பெற்றோர்களே உங்களைத் தான் என்ற தலைப்பிலும், TNTJ பேச்சாளர் சேக் அலாவுதீன் ரமலானை‌ வரவேற்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

மதரஸா மாணவர் மாணவிகளின் பயான் நிகழ்ச்சி விழிப்புணர்வு நாடகம் சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக கிளையின் துணை தலைவர் ஹிதாயத்துல்லா நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோபாலப்பட்டிணம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம், 8441081083















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments