கோபாலப்பட்டிணத்தில் ரமலான் மாதமும்-நோன்பு கஞ்சியின் சிறப்புகளும்!



இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதத்தில் பிறை தென்பட்ட நாளிலிருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும்.
மாத இறுதியில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். மாதம் முழுவதும் அதிகாலை பஜர் தொழுகையில் இருந்து மஹ்ரிப் தொழுகை பாங்கு சொல்லப்படும் வரை இஸ்லாமியா்கள் உண்ணாமலும், நீா் பருகாமலும், வீண் விஷயங்களில் ஈடுபடாமலும் நோன்பு இருப்பா். இரவில் சிறப்புத் தொழுகையிலும் ஈடுபடுவா். பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.


நோன்பு கஞ்சி

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் நோன்பு காலத்தில் நோன்பு திறப்பதற்காக வேண்டி பெரிய பள்ளிவாசலில் & தவ்ஹீத் பள்ளியில் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். இதனை ஊர் மக்கள் வாங்கி பயன் பெறுகின்றனர். மேலும் மக்கள் வரிசையாக நின்று வாங்கி செல்கின்றனர். அதே போல் பள்ளிவாசலில் இப்தார் திறப்பதற்காக நோன்பு கஞ்சி ஊரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்யப்படும். கோபாலப்பட்டிணத்தில் நோன்பு கஞ்சி ஸ்பெஷலாக இருக்கும்.‌ இதை விரும்பி சாப்பிடுவார்கள் அதிகம். மேலும் நோன்பு கஞ்சி செய்வதற்கு ஊரில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் தனவந்தர்கள் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றனர்.

இப்தார்
கோபாலப்பட்டிணத்தில் இப்தார் வீட்டிலும் மற்றும் பள்ளிகளில் நடைபெறும். பள்ளிகளில் நோன்பு கஞ்சி, வடை, பேரித்தம்பழம், தண்ணீர், சர்பத் போன்றவைகள் வழங்கப்படுகிறது.

வெளிநாடு வெளியூர் வாழ் மக்களின் ஆசை

பொதுவாக வெளிநாடு வெளியூர் வாழ் கோபாலப்பபட்டிணம் மக்கள் நோன்பு மாதத்தில் ஊரில் இருந்து நோன்பு பிடிப்பது பல உணர்வுகளை வெளிப்படுத்தும்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments