தனுஷ்கோடி கடலில் மீண்டும் உருவான மணல் பரப்பு தனுஷ்கோடியில் உருவான இயற்கையின் அற்புதம்.. நெகிழும் சுற்றுலா பயணிகள்




நீரோட்டம் அவ்வப்போது மாறுவதால் இயற்கை காட்டும் ஜாலமாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலுக்குள் சற்று தூரம் மணல் பரப்பு மீண்டும் உருவாகி இருக்கிறது. அதில் இறங்கிச்சென்று சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசிக்கிறார்கள்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை

ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ.் தொலைவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை அமைந்திருக்கிறது. சாலையின் இருபுறமும் கடல் சூழ காட்சிதரும் தனுஷ்கோடியானது சிறந்த சுற்றுலா தலமும்கூட. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராமேசுவரம் கோவிலுக்கு வரக்கூடியவர்கள், அப்படியே வாகனங்களில் தனுஷ்கோடி சென்று, கடல் அழகை ரசித்து செல்கின்றனர். அதே நேரத்தில் தனுஷ்கோடி கடலானது சீற்றம் உள்ள பகுதியாகும்.

இதனால் ஆண்டின் சில மாதங்களில் மணல் பரப்புகளை கடல்நீர் விழுங்கி முழுவதும் கடலாக காட்சிதரும்.. பின்னர் கடல் நீரோட்டம் வேறு திசைக்கு திரும்பி மீண்டும் மணல் பரப்பாகிவிடும்.

மீண்டும் மணல் பரப்பு

தனுஷ்கோடி அரிச்சல்முனை தெற்கு கடற்கரை பகுதி, சில மாதமாக முழுவதும் கடலாக இருந்து வந்தது. அலையானது சாலையோர தடுப்புச்சுவர் வரை வந்து மோதியது. ஆனால், சில நாட்களாகவே இயற்கை ஜாலம் காட்டி கடல் உள்வாங்கி, சாலையோரத்தில் இருந்து, ஒரு அகலமான மணல் சாலை போன்று மணல் பரப்பு உருவாகி இருக்கிறது.

அந்த மணல் பரப்பில் இறங்கி நடந்துசென்று சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அங்கு சென்று மணலில் சிவலிங்கம் செய்தும், கடல் நீரை தலையில் தெளித்தும் வழிபடுகின்றனர்.

பலர் அந்த மணல் பரப்புக்குள் சென்று கடலோடு சேர்த்து தங்களை போனில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். தெற்கு கடல் பகுதியில் இவ்வாறு மணல் திட்டு உருவானாலும், அரிச்சல்முனை சாைலக்கு வடக்கே உள்ள கடலில், எந்த மாற்றமும் இன்றி முழுமையான கடலாக காட்சி தருகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments