தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் ராமநாதபுரத்திற்கு சென்றார்.
அப்போது திருச்சி- புதுக்கோட்டை சாலையில் காலை 11.45 மணியளவில் மாத்தூர் போலீஸ் நிலையத்தை கடந்து சென்ற டி.ஜி.பி.யின் கார் திடீரென திரும்பி வந்து மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றது. இதையடுத்து, மாத்தூர் போலீசார் டி.ஜி.பி.யை வரவேற்றனர். இதை தொடர்ந்து மாத்தூர் போலீஸ் நிலையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி வளாகம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து மாத்தூர் போலீஸ் நிலையத்தை சிறப்பான முறையில் தூய்மையாக பராமரித்து வருவதற்கும், வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதையும் பாராட்டி மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் 15 நிமிடங்களுக்கு பிறகு போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் நமணசமுத்திரம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை பாராட்டி ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.