மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள கிராமசபை கூட்டத்தின் அஜெண்டா - தமிழக அரசால் வெளியீடு.!



வரும் மே 1- ஆம் தேதி தொழிலாளர் தினமான அன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் தாரேஸ் அஹமது இ.ஆ.ப., அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி1) துறை, நாள் 19.11.1998 அரசாணையின்படி தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அரசாணை (நிலை) எண்.130, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (சி4) துறை, நாள் 25.9.2006 அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்திட வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.

கிராம சபைக் கூட்டம் நடத்துவது குறித்து பதிவு செய்திடும் பொருட்டு கைபேசி செயலி (Android application) ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், 01.05.2023 அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும் மற்றும் கூட்டம் தொடர்பான அறிக்கையினை இவ்வியக்ககத்திற்கு 05.05.2023-க்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments