மதுவிற்கு எதிராக அதிரடி முழக்கம்! கோபாலப்பட்டிணம் அரசுப் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!!



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று 23/07/2026 மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். பேரணியானது கோபாலப்பட்டிணத்தின் முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த முதன்மை சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பேரணியின் போது, மாணவர்கள் மது மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், "போதைப்பொருள் சமூகத்தின் பகை", "மதுவை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம்" போன்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை உரக்க எழுப்பியவாறு சென்றனர்.

​இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டு போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்றுக்கொண்டனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments