கல்வி உதவித்தொகை பெற அஞ்சலகத்தில் மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதையொட்டி மாணவர்களுக்கு வங்கி கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்ற மாணவர்களின் பெரும்பாலானோரின் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே அந்த மாணவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். மேலும் கணக்கு எண் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

புதிதாக கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் அஞ்சலகத்தில் வங்கி கணக்கு எண் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதற்காக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments