கிழக்கு கடற்கரை சாலை வழியாக அதிராம்பட்டினம் டு மதுரைக்கு பகல் நேர பேருந்து சேவை இயக்க கோரிக்கை! புதிய பேருந்து சேவை தொடங்க ஆவணம் செய்யப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!




மல்லிப்பட்டினம்‌, சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி,‌ மணமேல்குடி, கோட்டைப்பட்டினம் மீமிசல், SP பட்டினம், தொண்டி கிழக்கு கடற்கரை  சாலை வழியாக அதிராம்பட்டினம் டு மதுரைக்கு பகல் நேர பேருந்து சேவை  இயக்க கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து புதிய பேருந்து சேவை தொடங்க ஆவணம் செய்யப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன் தமிழக அரசுக்கு  கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் வசிக்கும் பகுதி கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தது ஆகும். எங்கள் பகுதியிலிருந்து மதுரைக்கு செல்வதாக இருந்தால் தொண்டி போய் செல்வது தான் சுலபமான வழியாகும். எங்கள் பகுதியிலிருந்து நேரடியாக மதுரைக்கு பஸ் கிடையாது. எங்கள் பகுதியிலிருந்து மதுரைக்கு அரவிந்த கண் மருத்துவமனை மற்றும் பிற அலுவல் சார்ந்த பணிகளுக்காக அதிகமான மக்கள் மதுரைக்கு செல்கிறார்கள் எங்கள் பகுதிக்கு கீழ்கண்ட வழிதடத்தில் புதிய பேருந்தை இயக்க ஆவணம் செய்ய தங்களை பணிந்து கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் பதில் அளித்துள்ளது.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது, 

அதிராம்பட்டினம்-மதுரை வழி கட்டுமாவடி, அறந்தாங்கி தட நீளம் 181 கி.மீ ஆகும். அதிராம்பட்டினம் to கட்டுமாவடி, கட்டுமாவடி to அறந்தாங்கி, அறந்தாங்கி to மதுரை என பகுதி பகுதியாக போதுமான பேருந்து வசதி உள்ளது. அதிராம்பட்டினம் to மதுரை வழி: பட்டுக்கோட்டை, அறந்தாங்கி தட நீளம் 187 கி.மீ ஆகும். பட்டுக்கோட்டை மதுரை தினசரி 24 நடைகள் நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதிராம்பட்டினம் to பட்டுக்கோட்டை 12 கிமீ தூரத்திற்கு அடிக்கடி பேருந்து வசதிஉள்ளது.

கோரிக்கை வழித்தடமான அதிராம்பட்டினம் மதுரை வழி: தொண்டி தட நீளம் 194 கி.மீ. அதிராம்பட்டினம் to தொண்டி. தொண்டி to மதுரை என பகுதி பகுதியாக பேருந்து வசதி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் தற்போதுள்ள பேருந்து வசதிகளையே தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், அரசு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கிட அறிவிக்கும்போது கோரிக்கை வழித்தடத்திற்கு முன்னுரிமை வழங்கி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments