வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்




புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டம், தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற தங்களது விவரங்களை கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரம் அடிப்படையில் கிரைன்ஸ் இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு, வேளாண்மை உழவர் நலத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ப்புத்துறை, உணவு வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் விதை சான்றளிப்பு துறை, வருவாய்த்துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் விவசாயிகள் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.

மேலும் நிதி திட்ட பலன்கள், ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும். வேளாண் அடுக்குத் திட்டத்தில் பதிவு செய்ய புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம், வட்டார வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி கிரைன்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதார் எண், புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயனடையலாம். இதற்கான முகாம்கள் அனைத்து கிராமங்களிலும் வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் இந்த முகாம்களை பயன்படுத்தி வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments