வளவம்பட்டி அருகே லாரி மோதியதில் நெல் அறுவடை எந்திரம் சாலையில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல் அறுவடை எந்திரம்-லாரி கவிழ்ந்தன
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி(வயது 42). இவர் கந்தர்வகோட்டை அருகே கதிர் அறுவடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை பணியில் ஈடுபட்டுவிட்டு, கந்தர்வகோட்டையில் இருந்து பெருங்களூர் நோக்கி தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் வளவம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது புதுக்கோட்டையில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி வந்த டிப்பர் லாரி, நெல் அறுவடை எந்திரம் மீது மோதியது. இதில் நெல் அறுவடை எந்திரம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் நடுவே கவிழ்ந்தது. டிப்பர் லாரியும் சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதில் டிப்பர் லாரியை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, சிறுமங்களம் கக்கன் தெருவை சேர்ந்த துரைராஜின் மகன் பிரகாஷ்(35) மற்றும் நெல் அறுவடை எந்திர ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து வந்த ஆதனக்கோட்டை போலீசார், நெல் அறுவடை எந்திரத்தை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.