பாம்பன் கடல் பகுதியில் 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.
3 நாட்களாக நிறுத்தி வைப்பு
மும்பையில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா செல்வதற்காக மிதவை கப்பல்களை இழுத்தபடி இழுவை கப்பல்கள் வந்தன. பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக பாம்பன் குருசடை தீவு கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக அந்த கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து நேற்று துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கினர். அதன்பேரில் பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 20 மீட்டர் நீளமும், 150 டன் எடையும் கொண்ட இழுவை கப்பல் ஒன்று, சுமார் 600 டன் எடை கொண்ட பெரிய மிதவையை இழுத்தபடி தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.
கடந்து சென்றன
தொடர்ந்து மற்றொரு மிதவை கப்பலும் மிதவையை இழுத்தபடி தூக்குப் பாலத்தை கடந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கி சென்றது. இதேபோல் மும்பையில் இருந்து சென்னை செல்வதற்காக வந்த இழுவை கப்பல் ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது. உள்ளூரைச் சேர்ந்த சில மீன்பிடி விசைப்படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. ஒரே நேரத்தில் இழுவை மற்றும் மிதவை கப்பல்கள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.