மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 3-ந் தேதி கடைசி நாள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு




மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் 3-ந் தேதி கடைசி நாளாகும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

காலிப்பணியிடங்கள்

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் `ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு தொடர்பான அறிவிப்பினை கடந்த 3-ந் தேதி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் `பி' மற்றும் குரூப் `சி' நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்விவரங்கள் https://ssc.nic.in/ SSCFileServer/ PortalManagement/ UploadedFiles/ noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 4-ந் தேதி ஆகும்.

தேர்வு மையங்கள்

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரபிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்விணையதளத்தில் `TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் `AIM TN' என்ற யூடியூப் சேனல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொலிகளை கண்டு பயன்பெறலாம்.

இலவச பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 20-ந் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

இத்தேர்விற்கு விண்ணப்பித்து இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் விவரத்தினை decgc.pki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments