இந்தியாவில் முதன் முறையாக கொச்சியில் 11 தீவுகளை இணைக்கும் நீர்வழி மெட்ரோ திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்




கொச்சியில் 11 தீவுகளை இணைக்கும் நீர்வழி மெட்ரோ திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

நீர்வழி மெட்ரோ திட்டம்

இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.1137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் (சுற்றுலா படகு போக்குவரத்து) கொச்சியில் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது காணொலி காட்சி மூலம் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கொச்சி நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கடலில் உள்ள 11 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலில் படகு மூலம் 11 தீவுகளுக்கு சென்று ரசிக்கலாம். புதிய திட்டம் மூலம் தரைவழியில் மட்டும் இருந்த மெட்ரோ திட்டம், கடல் வழியிலும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு அம்சங்கள்

கொச்சி படகு குழாமில் இருந்து புறப்பட்டு கோர்ட்டு, வைபின், காக்கநாடு, துறைமுகம், வெலிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும். ஒரு படகில் 100 பேர் பயணம் மேற்கொள்ளலாம். 78 கி.மீ. சுற்றளவில் படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரெயிலில் உள்ளவாறு, கழிப்பிடம், உணவு, குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் நீர்வழி மெட்ரோ திட்ட படகுகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகளை இந்த திட்டம் வெகுவாக கவரும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் வைபினில் இருந்து கோர்ட்டுக்கு 20 நிமிடங்களில் செல்லலாம். தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த படகு சேவை நடைபெறும். காலை, மாலை நேரத்தில் கோர்ட்டு-விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர்வழி மெட்ரோ இயக்கப்படும்.

கட்டண விவரம்

பயணிகளுக்கு கட்டணம் ரூ.20 முதல் ரூ.40 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செல்லக்கூடிய பயணிகள் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர கட்டணம் ரூ.600, அரையாண்டு கட்டணம் ரூ.1,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் பாஸ்களை முனையங்களில் உள்ள கவுண்ட்டர்களில் கியூ ஆர்கோடு பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் மெட்ரோ சேவையில் பயன்படுத்தப்படுகிறது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments