நண்பர்கள்
கரூர் மாவட்டம், குளித்தலை கீழவெளியூரை சேர்ந்தவர் ரெங்கராஜ் மகன் ஜீவா (வயது 27). இவரது நண்பர் சோமரசம்பேட்டை கீழ வயலூரை சேர்ந்த சுப்பையன் மகன் பார்த்திபன் (26). இவர்கள் 2 பேரும், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு காரில் வந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருச்சிக்கு கீரனூர் அருகே ஒத்தக்கடை வழியாக திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை பார்த்திபன் ஓட்டினார்.
வாலிபர் பலி
அப்போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி திருச்சி அல்லூரை சேர்ந்த பிரேம்குமார் (25) என்பவர் ஓட்டி வந்த காரும், பார்த்திபன் ஓட்டி வந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. பார்த்திபன் ஓட்டி வந்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 2 காரும் அப்பளம் போல் நொறுங்கியது. படுகாயமடைந்த ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பார்த்திபன் படுகாயமடைந்தார். பிரேம்குமார் சீட் பெல்ட் அணிந்து இருந்ததாலும், அவரது காரில் பாதுகாப்புக்கான முன் பக்க பலூன் வெடித்ததால் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பார்த்திபனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடைேய ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.