வடகாடு அருகே மண்எண்ணெய் குறைத்து வழங்குவதாக ரேஷன் கடைக்கு பூட்டு போட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு




வடகாடு அருகே அனவயல் தடியமனை பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் மண்எண்ணெய் குறைத்து வழங்குவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுமதி இல்லாமல் இது போன்ற போராட்டங்களில் ஈடுபட கூடாது என எனக்கூறி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து பூட்டு போடும் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments