திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் கிழக்கு கடற்க்கரை சாலையில் பெங்களுரிலிருந்து வேளாங்கண்ணி செல்ல முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற கார் ஒன்று திடீரென்று நிலை தடுமாறி கவிழ்ந்து சாலையோர வாய்காலில் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த பெங்களுரை சேர்ந்த லெட்சுமி(45), வீரப்பா(65), முனியம்மா(70), அம்மு(35), கௌசல்யா(17), கிஷோர்(15), சுரேஷ்(28), சுகனா(17), அம்சவள்ளி(19), டிரைவர் சூரி(38) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 10பேர் காரின் இடிபாடுகளில் சிக்கி அனைவரும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு ஏராளமான மக்கள் கூடி மீட்பு பணியில் ஈடுபட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக 9பேரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.