புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இடையாத்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுந்தரபாண்டியன், ரவிச்சந்திரன், சிதம்பரம், ராமு. இவர்களுக்கு சொந்தமான 4 மாடுகள் இடையாத்திமங்கலம் வயல் பகுதியில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு மின்கம்பம் எதிர்பாராதவிதமாக வயல் பகுதியில் சாய்ந்து விழுந்தது.
மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மின்கம்பிகள் மாடுகளின் மீது விழுந்தது. இதில் வயலில் நின்றிருந்த 4 மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து மாடுகளை மீட்டனர். இதையடுத்து அங்கு வந்த மாட்டின் உரிமையாளர்கள் செத்து கிடந்த மாடுகளை பார்த்து கதறி அழுதனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.