SP பட்டினத்தில் தமுமுக-மமக சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி!



SP பட்டினத்தில் தமுமுக-மமக சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எஸ்பி பட்டினம் கிளையின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 23-04-2023 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட துணைச் செயலாளர் நிசார் தலைமையில், தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமுமுகவின் தொடர் சேவைகள், கடந்தகால சேவைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

தமுமுக மாவட்ட செயலாளர் j.ஜாவித் அஸ்ஸாம் BE. தமுமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
 

இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் யாண்பு இப்ராஹிம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வசந்தம் ரகுமான், தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் பரக்கத் அலி மைதின் சுல்தான், மங்களக்குடி கிளை தலைவர் ஜாகிர், புதுவலசை கிளை துணைச் செயலாளர் முகம்மது அப்சர், பனைக்குளம் செய்யது இப்ராஹிம், எஸ்.பி.பட்டினம் கிளை தலைவர் பஷீர் அலி, கிளை செயலாளர் ஹாஜி முகம்மது, ஒன்றிய பொருளாளர் முகமது அலி ஜின்னா, மாவட்ட செயலாளர் கவிஞர் பாக்கி, மமக கிளை செயலாளர் ஜாவித், இளைஞர் அணி செயலாளர் புஹாரி, மமக கிளை செயலாளர் அப்துல்லாஹ், IPP செயலாளர் முஹம்மது இலியாஸ், விளையாட்டு குழு கிளை செயலாளர் மிஸ்பா, கிளை செயலாளர் அபுதாஹிர், கிளை நிர்வாகி அப்சர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்:
எஸ்.பி பட்டினம் கிளை
ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments