தொண்டியில் இந்து ஜனநாயக பேரவை சார்பில் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மறைந்த பழனி நினைவாக பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இந்து ஜனநாயக பேரவை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.சவுத்ரி ஆகியோர் படகு போட்டியை தொடங்கி வைத்தனர். இப்போட்டியில் 27 பாய்மர படகுகள் கலந்து கொண்டன. ஏழு கடல் மைல் தூரம் சென்று வந்த இப்படகு போட்டியில் ஒரு படகுக்கு ஆறு பேர் வீதம் போட்டி போட்டு காற்றின் வேகத்திற்கு ஏற்றார் போல் படகுகளை இயக்கினர். போட்டி 2 மணி அளவில் தொடங்கியது. ஆனால் கடலில் காற்று அதிகமாக இல்லாததால் மாலை 6 மணிக்கு மேல்தான் படகுகள் கரைக்கு வந்தன. இப்போட்டியில் முதல் பரிசு தொண்டி புதுக்குடி இளஞ்சியம் சின்னத்தம்பி, 2-ம் பரிசு கருப்பையா ரெத்தினவேல், 3-ம் பரிசு கோட்டைப்பட்டினம் வ.புதுக்குடி குணா தனுஸ்ரீ, 4-ம் பரிசு தொண்டி புதுக்குடி தில்லை நடராஜன், 5-ம் பரிசை பாசிப்பட்டினம் வண்ணார காளி ஆகியோரது படகுகள் பெற்றன. இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். இதையொட்டி திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் தலைமையில் கடலோர காவல் படை போலீசார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.