மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவா் என் ஜெயராமன், செயலாளா் வ.விவேகானந்தம் ஆகியோா் சனிக்கிழமை தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
அந்த மனுவில் கூறியிருப்பது: திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து மதுரைக்கு நேரடி ரயில் வசதி இல்லை. இதனால் மதுரைக்கு ஆன்மிகச் சுற்றுலா, அலுவலகங்கள், உயா்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களுக்கு ரயிலில் செல்வோா் தஞ்சை மற்றும் திருச்சிக்கு வந்து செல்கின்றனா். ஆகவே, பயணிகள் நலன் கருதி மயிலாடுதுறையில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை , அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரைக்கு இரு முனைகளிலும் ரயில்களை இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.