கோபாலப்பட்டிணத்தில் தொடர் கோடை மழை: ஒரே இரவில் கொட்டி தீர்த்த கண மழை காரணமாக பாதி கொள்ளளவை எட்டி வரும் காட்டுக்குளம்!! மற்றும் நிரம்பி வரும் நெடுங்குளம்!!




தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கோடை மழை காரணமாக கோபாலப்பட்டிணத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் காட்டுக்குளம், நெடுங்குளம் ஆகிய இரண்டு குளங்களை மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்

கோபாலப்பட்டிணத்தில் கடந்த (2019 முதல் 2021 வரை) 3 ஆண்டுகள் நல்ல மழை பெய்ததின் காரணமாக குளங்கள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதுடன் மக்களுக்கும் தேவை பூர்த்தியானது.

பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை குளத்தை சுத்தம் செய்வதற்காக தண்ணீரை வெளியேற்றி மீன்களை பிடித்து ஏலம் விடுவது ‌வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரண்டு குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. 

போதிய பருவ மழை இல்லாமல் குளங்களில் உள்ள நீர் மாசடைந்து வற்றிய நிலையில் காணப்பட்டு வந்தது.  நேற்று மே 03 இரவு பெய்த கண மழையால் குளங்கள் நிரம்பி வருகிறது. 
 
மக்கள் பயன்பாட்டுக்குரிய காட்டுகுளம் பாதி கொள்ளளவை எட்டிவிட்டது. நெடுங்குளம்  நிரம்பி வருகிறது.






காட்டுக்குளம் பாதி கொள்ளவை எட்டியுள்ளது மட்டுமல்லாது முன்னர் வற்றி கிடந்த குளம் இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதனால் வெளிநாட்டில் குழாய் தண்ணீரில் குளித்து வரும் கோபாலப்பட்டிணம் உறவுகள் நாம் எப்பொழுது ஊருக்கு வந்து இந்த குளத்தில் நீச்சலடித்து குளிக்க போகிறோம் என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.

தொடர் மழையால் குளங்கள் நிரம்பி இருப்பது கோபாலப்பட்டிணம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








காட்டுக்குளம் நெடுங்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றி சுத்தம் செய்யப்பட்டது. தற்போது மழை பெய்து வருவதால் மழை நீர் குளத்தில் நிரம்பி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments